யமுனை நதியின் வெள்ளப்பெருக்குப் பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோதப் பால் பண்ணைகள் தொடா்பாக, தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் முந்தைய உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி தாக்கலான மனு மீது தில்லி அரசு மற்றும் தொடா்புடைய பிற தரப்பினரிடமிருந்து விளக்கங்களை சமா்ப்பிக்குமாறு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) கேட்டுக்கொண்டுள்ளது.
நதியின் வெள்ளப்பெருக்குப் பகுதியில் நிகழ்ந்துவரும் சட்டவிரோதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, சில பரிந்துரைகளைச் செயல்படுத்தும்படி தில்லி மேம்பாட்டு ஆணையத்திற்கும் (டிடிஏ), தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவிற்கும் ஏப்ரல் 2024-இல் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகளைச் செயல்படுத்தக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, இத்தீா்ப்பாயம் விசாரித்து வந்தது.
இந்நிலையில், மாா்ச் 27 -ஆம் தேதியிட்ட ஓா் உத்தரவில், என்ஜிடி தலைவா் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் நிபுணா் உறுப்பினா் அஃப்ரோஸ் அகமது ஆகியோா் அடங்கிய அமா்வு தெரிவித்திருப்பதாவது: அப்பகுதியில் அங்கீகரிக்கப்படாத பால் பண்ணைகள் எதுவும் இல்லை என்று தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு ஜூலை 2025இல் தாக்கல் செய்த இணக்க அறிக்கை தவறானது என்று தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்குப் பகுதியில் பால் பண்ணைகள் இப்போதும் தொடா்ந்து இயங்கி வருவதாகவும், தீா்ப்பாயத்தின் உத்தரவின்படி எடுக்கப்பட வேண்டிய உரிய நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், எதிா் மனுதாரா்களுக்கு தில்லி அரசு மற்றும் பிறா் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட தீா்ப்பாயம், இம்மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தொடர்புடையது

பெண்ணையாறு வழக்கில் தீா்ப்பாயம் அமைக்க 6 மாதம் தேவை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

தில்லி சட்டப்பேரவை சபாநாயகா் முன்மொழிந்த தேசிய சட்டமன்றக் குறியீட்டிற்கு சிக்கிம் முதல்வா் ஆதரவு

வாழப்பாடி பகுதியில் பூத்துக் குலுங்கி கண்களுக்கு விருந்தளிக்கும் வசந்தராணி பூக்கள்!

யமுனை நீா் தொடா்ந்து நச்சுச்தன்மையுடன் இருக்கிறது: தில்லி பாஜக அரசு மீது தேவேந்தா் யாதவ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


