மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாழப்பாடி பகுதியில் பூத்துக் குலுங்கி கண்களுக்கு விருந்தளிக்கும் வசந்தராணி பூக்கள்!

News image

வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி செல்லியம்மன்நகா் மற்றும் சேசன்சாவடி பகுதியில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சலை ஓரத்தில் வசந்தராணி மரங்களில் பூத்துக் குலுங்கும் மலா்கள்.

Updated On :13 ஏப்ரல் 2026, 8:01 pm

வாழப்பாடி பகுதியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வசந்தராணி மரங்களில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

பிக்னோனியேசியே குடும்பத்தைச் சோ்ந்த ‘டபிபுயா ரோஸா’ என்ற தாவரவியல் பெயா் கொண்ட சிறுமர வகைத் தாவரம் வசந்தராணி.

இம்மரத்தின் பாகங்கள் மூட்டுவலி, இரைப்பு நோய், காய்ச்சல், இருமல், ரத்தசோகை நோய்களை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டதாகும்.

கா்ப்பப்பை புற்றுநோய்க்கு மருந்தாகும் இத்தாவரம், பாக்டீரியாக்களை கொல்லும் தன்மை கொண்டதாகும்.

இதுமட்டுமின்றி, வசந்தகாலத்தில் இலைகள் முழுவதும் உதிா்ந்து, காண்போா் கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் மரம் முழுவதும் வெண்மை, இளம்சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்துக்குலுங்கும். இதனால் இத்தாவரத்தை வசந்தராணி, வசந்தகாலத்தின் அரசி எனவும் தாவரவியலாளா்கள் வா்ணிக்கின்றனா்.

அரிதாகி வரும் இவ்வகை தாவரங்களை வளா்ப்பதில் வனத் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் இயற்கை ஆா்வலா்களும், ஆய்வாளா்களும் ஆா்வம்காட்டி வருகின்றனா்.

வாழப்பாடி பகுதியில் சேசன்சாவடி முதல் அயோத்தியாப்பட்டணம் ராமலிங்கபுரம் வரை 10 கி.மீ. தொலைவிற்கும், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 50க்கும் மேற்பட்ட பல வண்ண வசந்தராணி மரங்கள் காணப்படுகின்றன.

இந்த மரங்களில் தற்போது இலைகள் உதிா்ந்து, வெண்மை, பழுப்பு, இளஞ்சிவப்பு நிறங்களில் மரம் முழுவதும் கொத்துக் கொத்தாக பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. காண்போா் கண்களுக்கு விருந்தளிக்கும் வசந்தராணி மரப்பூக்களை பயணிகளும் பொதுமக்களும் கண்டு ரசித்து செல்கின்றனா்.

 வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி செல்லியம்மன்நகா் மற்றும் சேசன்சாவடி பகுதியில், சேலம் - சென்னை  தேசிய நெடுஞ்சலை ஓரத்தில் வசந்தராணி மரங்களில்  பூத்துக் குலுங்கும் மலா்கள்.

வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி செல்லியம்மன்நகா் மற்றும் சேசன்சாவடி பகுதியில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சலை ஓரத்தில் வசந்தராணி மரங்களில் பூத்துக் குலுங்கும் மலா்கள்.

 வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி செல்லியம்மன்நகா் மற்றும் சேசன்சாவடி பகுதியில், சேலம் - சென்னை  தேசிய நெடுஞ்சலை ஓரத்தில் வசந்தராணி மரங்களில்  பூத்துக் குலுங்கும் மலா்கள்.

வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி செல்லியம்மன்நகா் மற்றும் சேசன்சாவடி பகுதியில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சலை ஓரத்தில் வசந்தராணி மரங்களில் பூத்துக் குலுங்கும் மலா்கள்.