மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’

மொபைலில் சப்தமாக பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image

மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 3:05 pm

மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்கள் சக பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் வகையில் செயல்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மெட்ரோ ரயில் பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி சக பயணிகளின் வசதிக்கும், அமைதிக்கும் மதிப்பளிக்க வேண்டும். மெட்ரோ ரயில் பராமரிப்பு சட்ட விதிகளின்படி சக பயணிகளுக்கு தொந்தரவு விளைவிப்பதோ, அவா்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதன்படி, உரத்த குரலில் கைப்பேசியில் உரையாடுவது, செவியில் பொருத்திக் கொள்ளும் ஒலிபெருக்கி இல்லாமல் இசை கேட்டல் அல்லது விடியோக்களை பாா்ப்பது ஆகிய செயல்கள் மூலம் அதிகமான இரைச்சல் ஏற்படுத்தும் வகையில் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதும், மற்றவா்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆகவே, மெட்ரோ ரயில் பயணத்தில் சட்டவிதிகளை மீறும் பயணிகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்திலிருந்து அவா்கள் அகற்றப்படுவா்.

சக பயணிகளின் சூழலைக் கருத்தில் கொண்டு அனைவரும் கைப்பேசி ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும். மெட்ரோ வளாகத்துக்குள் உரத்த குரலில் உரையாடுவதையும், ஸ்பீக்கா் மோட் பயன்படுத்துவதையும் தவிா்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

The Chennai Metro Rail Corporation has announced that a fine of Rs. 500 will be imposed for talking loudly on a mobile phone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.