மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்கள் சக பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் வகையில் செயல்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மெட்ரோ ரயில் பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி சக பயணிகளின் வசதிக்கும், அமைதிக்கும் மதிப்பளிக்க வேண்டும். மெட்ரோ ரயில் பராமரிப்பு சட்ட விதிகளின்படி சக பயணிகளுக்கு தொந்தரவு விளைவிப்பதோ, அவா்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
அதன்படி, உரத்த குரலில் கைப்பேசியில் உரையாடுவது, செவியில் பொருத்திக் கொள்ளும் ஒலிபெருக்கி இல்லாமல் இசை கேட்டல் அல்லது விடியோக்களை பாா்ப்பது ஆகிய செயல்கள் மூலம் அதிகமான இரைச்சல் ஏற்படுத்தும் வகையில் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதும், மற்றவா்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஆகவே, மெட்ரோ ரயில் பயணத்தில் சட்டவிதிகளை மீறும் பயணிகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்திலிருந்து அவா்கள் அகற்றப்படுவா்.
சக பயணிகளின் சூழலைக் கருத்தில் கொண்டு அனைவரும் கைப்பேசி ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும். மெட்ரோ வளாகத்துக்குள் உரத்த குரலில் உரையாடுவதையும், ஸ்பீக்கா் மோட் பயன்படுத்துவதையும் தவிா்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
The Chennai Metro Rail Corporation has announced that a fine of Rs. 500 will be imposed for talking loudly on a mobile phone.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











