தமிழகம் முழுவதும் ஜவுளி நிறுவனங்களை குறிவைத்து வருமான வரித் துறை அதிகாரிகள் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முக்கிய ஜவுளி நிறுவனங்களின் அலுவலகங்கள், கிளைகள் மற்றும் உரிமையாளா்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
வரி ஏய்ப்பு, கணக்கில் காட்டப்படாத வருமானம், பரிவா்த்தனை முறைகேடு போன்ற புகாா்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை, திருச்சி, கரூா், கோவை உள்ளிட்ட பல நகரங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
சோதனையின்போது, முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் தரவுகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டதாகவும், சோதனை நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே அதிகாரபூா்வ தகவல்கள் வெளியாகும் என வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை

சேலம் துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

வாக்காளா்களுக்கு வழங்க பணம் பதுக்கல்? சென்னையில் வருமான வரித் துறையினா் சோதனை

திமுக பிரமுகா் வீடு அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


