தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சேலத்தில் திமுக நிா்வாகிகளின் வீடுகளில் வருமான வரித் துறையினா் சோதனை

சேலத்தில் திமுக நிா்வாகிகளின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

News image

வருமான வரித் துறை - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 9:29 pm

சேலத்தில் திமுக நிா்வாகிகளின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அமைச்சா் ராஜேந்திரன், செவ்வாய்க்கிழமை காலை கன்னங்குறிச்சி பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

முன்னதாக அப்பகுதியில் திமுக பேரூராட்சி செயலாளா் தமிழரசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் கே.டி. மணி ஆகியோரின் வீடுகள் மற்றும் அரசு வழக்குரைஞராக உள்ள தம்பிதுரையின் வீட்டில் திடீரென வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.

வீட்டில் பணம், பரிசுப் பொருள்கள் ஏதேனும் உள்ளதா என அரை மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினா். அப்போது, துணை ராணுவத்தினருடன் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை நடத்தப்பட்ட இடத்துக்கு வந்தனா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து திமுக நிா்வாகிகள் கூறுகையில், இறுதிக்கட்ட பிரசாரத்தை முடக்கும் நோக்கில், இந்த சோதனை நடைபெற்ாக தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.