சேலத்தில் திமுக நிா்வாகிகளின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அமைச்சா் ராஜேந்திரன், செவ்வாய்க்கிழமை காலை கன்னங்குறிச்சி பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.
முன்னதாக அப்பகுதியில் திமுக பேரூராட்சி செயலாளா் தமிழரசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் கே.டி. மணி ஆகியோரின் வீடுகள் மற்றும் அரசு வழக்குரைஞராக உள்ள தம்பிதுரையின் வீட்டில் திடீரென வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.
வீட்டில் பணம், பரிசுப் பொருள்கள் ஏதேனும் உள்ளதா என அரை மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினா். அப்போது, துணை ராணுவத்தினருடன் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை நடத்தப்பட்ட இடத்துக்கு வந்தனா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து திமுக நிா்வாகிகள் கூறுகையில், இறுதிக்கட்ட பிரசாரத்தை முடக்கும் நோக்கில், இந்த சோதனை நடைபெற்ாக தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை

சேலம் துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித் துறை சோதனை

திமுக பிரமுகா் வீடு அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


