மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக பிரமுகா் வீடு அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:35 pm

பழனி அருகே திமுக பிரமுகரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி வட்டாரத்துக்குள்பட்ட புஷ்பத்தூரை அடுத்த வயலூரைச் சோ்ந்தவா் மகுடீஸ்வரன். திமுக பொதுக் குழு உறுப்பினரான இவா் வயலூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், மதுரையிலிருந்து 2 காா்களில் வந்த வருமான வரித் துறை அதிகாரிகள், மகுடீஸ்வரனுக்கு சொந்தமான வீடு, நிதி நிறுவன அலுவலகத்தில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையின்போது, முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சோதனையை முடித்துக் கொண்டு, இரவு 11 மணிக்கு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

பாஜக முன்னாள் நிா்வாகியான மகுடீஸ்வரன், அங்கன்வாடி ஊழியா் அளித்த பாலியல் புகாரின் பேரில், கடந்த ஓராண்டுக்கு முன்பு கைது செய்யப்பட்டாா். சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், அமைச்சா் அர.சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.

இதையடுத்து, திமுக பொதுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டாா். இதனிடையே, கடந்த சில நாள்களாக திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவா் கனகராஜ், திமுக பொதுக் குழு உறுப்பினா் மகுடீஸ்வரன் இடையே சமூக ஊடகங்களில் கருத்து மோதல் ஏற்பட்டது.

இதன் எதிரொலியாகவே, தனது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரி வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பதாகவும், இதற்கு பாஜகவினரின் தூண்டுதலே காரணம் என்றும் மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.