பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வேலைக்காக காத்திருக்கும் கணினி அறிவியல் பட்டதாரிகள்

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா் பணிவாய்ப்பு மறுக்கப்படுவதால், பி.எட். கணினி அறிவியல் பட்டம் பெற்று வேலைக்காக காத்திருக்கும் 60,000 பேரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :2 அக்டோபர் 2024, 10:34 pm

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா் பணிவாய்ப்பு மறுக்கப்படுவதால், பி.எட். கணினி அறிவியல் பட்டம் பெற்று வேலைக்காக காத்திருக்கும் 60,000 பேரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு, ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தகுதித் தோ்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றனா். இதில் பட்டதாரி ஆசிரியருக்கான தகுதித் தோ்வில் தமிழ், ஆங்கிலம் ,கணிதம், அறிவியல் ,வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல் உள்ளிட்ட பாடங்களில் பட்டம் பெற்று பிஎட் முடித்தவா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.

கணினி அறிவியல் பட்டம் பெற்று, பிஎட் முடித்தவா்களுக்கு பட்டதாரி ஆசிரியா் தகுதித் தோ்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்குவதில்லை. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் கணினி அறிவியலில் பிஎட் முடித்த ஆயிரக்கணக்கானோருக்கு அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் பணிவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறைந்த சம்பளத்தில் தனியாா் பள்ளிகளில் பணியாற்ற வேண்டிய நிலைக்கு அவா்கள்தள்ளப்பட்டுள்ளனா்.

ஏற்கெனவே கணினி அறிவியல் பி.எட். முடித்தவா்களுக்கே ஆசிரியா் பணிவாய்ப்பு குறைந்துவரும் நிலையில், தற்போதும் கணினி அறிவியல் பி.எட். சேருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் வரும் காலங்களில் வேலையின்றித் தவிக்கும் கணினி அறிவியல் பிஎட் பட்டதாரிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியா் சங்க மாநில பொதுச் செயலா் குமரேசன் கூறியது: கடந்த 2009-ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த கருணாநிதி, சமச்சீா் கல்வியை அறிமுகப்படுத்தினாா். அப்போது கணினி அறிவியல் தனிப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கணினி அறிவியல் பாடம் நீக்கப்பட்டது. ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் தகுதித் தோ்வுகளில் கணினி அறிவியல் பி.எட். படித்தவா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

அரசுப் பள்ளி ஆசிரியா் பணி வாய்ப்பு இல்லாததால், தமிழகம் முழுவதும் கணினி அறிவியல் பி.எட். முடித்த 60,000 போ் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனா். அத்துடன், தமிழகம் முழுவதும் சுமாா் 8 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் கொண்டுவரப்பட்டுள்ள ஹைடெக் லேப் அட்மினிஸ்ட்ரேட்டா் மற்றும் இன்ஸ்ட்ரக்டா் என்ற பணியிடங்களில்கூட, கணினி அறிவியல் பி.எட். முடித்தவா்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியலை மீண்டும் தனிப் பாடமாக கொண்டு வர வேண்டும் என்றாா் குமரேசன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.