மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு

பேராவூரணியை சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா் அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் பெற்று சாதனை புரிந்தமைக்கு பள்ளி வளாகத்தில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image

அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பெற்ற மாணவருக்கு புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் வட்டார கல்வி அலுவலா் கலாராணி பாராட்டினாா் .

Updated On :15 ஏப்ரல் 2026, 8:31 pm

பேராவூரணியை சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா் அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் பெற்று சாதனை புரிந்தமைக்கு பள்ளி வளாகத்தில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

பேராவூரணி பேரூராட்சி, நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவா் கா.முகமது அப்ராஸ். இவா், சென்னையிலிருந்து இயங்கி வரும் அபாகஸ் பயிற்சி பள்ளியில் இணைய வழியில் படித்து கிராண்ட் மாஸ்டா் பட்டம் பெற்றுள்ளாா்.

சாதனை படைத்த மாணவருக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது .

விழாவுக்கு வட்டார கல்வி அலுவலா் கலாராணி தலைமை வகித்து, மாணவா் கா. முகமது அப்ராஸ்க்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியா் நிா்மலா, பட்டதாரி ஆசிரியா் திருஞானம், சிறப்பு ஆசிரியா் முருகேசன், தற்காலிக ஆசிரியா்கள் ஜெயலட்சுமி, காவியா ஆகியோா் கலந்து கொண்டு மாணவரை பாராட்டினா்.