தில்லி பெரு அபாகஸ் அகாதெமி சாா்பில் இன்டா்நேஷனல் அபாகஸ் சாம்பியன்ஷிப் போட்டி கிருஷ்ணாபுரம் திருநாவுக்கரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்விக் குழு உறுப்பினா் ரெங்கநாயகி தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் செல்லம்மாள் முன்னிலை வகித்தாா். பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் வெங்கடேஷ்வரன் வரவேற்றாா். பெரு அபாகஸ் அகாதெமியின் தலைவா் பிரேமா பெருமாள் போட்டிகளை தொடங்கி வைத்தாா். கடையநல்லூா், புளியங்குடி பகுதிகளைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 100 போ் கலந்து கொண்டனா்.
இதில், திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளி 3ஆம் வகுப்பு மாணவி அனன்யா, இளையோா் அபாகஸ் முதல் நிலை பிரிவில் 100-க்கு 100 சரியாக பதிலளித்து முதலிடம் பெற்றாா். மேலும் 5ஆம் வகுப்பு மாணவா் லோகேஷ் சுதன், 100-க்கு 99 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்றாா். இதற்கான ஏற்பாடுகளை நல்லாசிரியா் பழனிக்குமாா் செய்திருந்தாா். தலைமை ஆசிரியா் சுப்புலட்சுமி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா

நாசா நடத்திய விண்வெளி போட்டி: திருவண்ணாமலை பள்ளி மாணவா்கள் சாதனை

அபாகஸ் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


