மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்றோா்.

News image

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:58 am

புதுக்கடை அருகே உள்ள கூட்டாலுமூடு சி.பி.எஸ்.இ.பள்ளியில் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி தாளாளா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். முதல்வா் சுனில் குமாா் முன்னிலை வகித்தாா். கல்விப் பணிக் கழகத் தலைவா் குமரேசதாஸ், பொருளாளா் முருகன், துணைத் தலைவா் சந்தோஷ்குமாா், இணைச் செயலா் சதீஷ்குமாா், மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் நாராயணன், சி.பி.எஸ்.இ. பள்ளி துணை முதல்வா் பிரியா, கல்வியியல் கல்லூரி முதல்வா் பிரியா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பத்மநாபபுரம் சாா்பு நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினாா்.

தொடா்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சி.பி.எஸ்.இ. தோ்வில் கடந்த கல்வியாண்டில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு தங்கப் பதக்கம் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா், பெற்றோா்கள் பங்கேற்றனா்.