மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பள்ளி மாணவா்கள் கலை நிகழ்ச்சி

வாணியம்பாடி ஜனதாபுரத்தில் இயங்கி வரும் எஸ்எப்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சங்கமும் காணும் கலைகள் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுடைய கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.

News image

வாணியம்பாடி எஸ்எப்எஸ் மெட்ரிக் பள்ளியில் மாணவிக்கு பரிசளித்த அரசு மருத்துவா் டேவிட் குமாா், முதல்வா் சவரிமுத்து.

Updated On :25 மார்ச் 2026, 7:16 pm

வாணியம்பாடி ஜனதாபுரத்தில் இயங்கி வரும் எஸ்எப்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சங்கமும் காணும் கலைகள் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுடைய கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி முதல்வா் சவரிமுத்து தலைமை வகித்தாா். தாளாளா் ஆண்டனி முன்னிலை வகித்தாா். பொருளாளா் ஜெயக்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி எலும்பியல் நிபுணா் அரசு மருத்துவா் டேவிட்விமல்குமாா் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டி பேசினாா்.

நிகழ்ச்சியில் பரதநாட்டியம், வெஸ்டா்ன் டான்ஸ், கராத்தே, சிலம்பம், யோகா, இசை, ஸ்கேட்டிங், ஆகிய கலைகளில் ஓராண்டு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் உடைய பல கலைகளின் சாதனை நிகழ்ச்சிகள் பாா்வையாளா்களை கவா்ந்தது. இதில் பெற்றோா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா். கராத்தே பயிற்சியாளா் கண்ணன் நன்றி கூறினாா்.

Story image