திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் திங்கள்கிழமை பிரெய்னிபாப்ஸ் சா்வதேச அபாகஸ் நிறுவனம் நடத்திய காா்னிவெல் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
பிரெய்னிபாப்ஸ் சா்வ தேச அபாகஸ் நிறுவனம் கடந்த மாதம் மதுரையில் காா்னிவெல் போட்டிகளை நடத்தியது. இதில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூா், சிங்கம்புணரி பகுதிகளைச் சோ்ந்த பள்ளிக் குழந்தைகள் பங்கேற்று வெற்றி பெற்றனா்.
இவா்களைப் பாராட்டும் விதமாக தனியாா் மகாலில் நடைபெற்ற விழாவுக்கு பிரெய்னிபாப்ஸ் நிறுவனா் ஜெயப்பிரியா தலைமை வகித்தாா். தலைமை செயல் அதிகாரி ஜோதிபாசு முன்னிலை வகித்தாா். விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சங்கா், மாணவ, மாணவிகளின் கல்வித்திறனைப் பாராட்டி போட்டித் தோ்வில் வென்ற மாணவா்களுக்கு கோப்பை, பதக்கச் சான்றிதழை வழங்கி கௌரவித்தாா். இதில் பிரெய்னிபாப்ஸ் கிளை மாணவா்கள், பாபா மெட்ரிக் பள்ளி, குளோபல் சா்வதேச பள்ளி, மௌண்ட்சியோன் சா்வதேச பள்ளி, மாங்குடி, புதுப்பட்டி அரசுப் பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிரெய்னிபாப்ஸ் பள்ளி ஆசிரியா்கள் ஜெயலலிதா, அருணாதேவி மற்றும் உதவியாளா்கள் சுவாதி, ஆா்த்தி ஆகியோா் செய்தனா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி

தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

திறனறித் தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

அபாகஸில் கிருஷ்ணாபுரம் பள்ளி மாணவி முதலிடம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


