திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

காவிரி பாசனப் பகுதியில் மெழுகு வண்டுகளை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்

பூலாம்பட்டி காவிரி பாசனப் பகுதியில், பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வந்த மெழுகு வண்டுகளை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு செயல் விளக்க பயிற்சி முகாம் பூலாம்பட்டியில் நடைபெற்றது. 

News image
மெழுகு வண்டுகளை காட்டுப்படுத்திட​  விவசாயிகளுக்கு நேரிடை செய்முறை பயிற்சி அளிக்கும் வேளாண் ஆராய்ச்சி குழுவினர்.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:02 am

DIN


எடப்பாடி: பூலாம்பட்டி காவிரி பாசனப் பகுதியில், பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வந்த மெழுகு வண்டுகளை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு செயல் விளக்க பயிற்சி முகாம் பூலாம்பட்டியில் நடைபெற்றது. 

சேலம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள, காவிரி பாசனப் பகுதிகளான பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது அதிக அளவிலான நிலப்பரப்பில் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மரவள்ளி பயிர் செய்யப்பட்ட வயல்வெளிகளில், இரவு நேரங்களில் பெரும் எண்ணிக்கையிலான மெழுகு வண்டுகள் ஆக்கிரமித்து மரவள்ளி பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதனை கட்டுப்படுத்த இயலாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

Story image

மெழுகு வண்டுகளை காட்டுப்படுத்திடும் முறை குறித்து விவசாயிகளுக்கு நேரிடை செய்முறை பயிற்சி அளித்த வேளாண் ஆராய்ச்சி குழுவினர்.

சேலம் மாவட்டம், சந்தியூர் பகுதியில் இயங்கிவரும் வேளாண் ஆராய்ச்சி மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் தலைமையிலான குழுவினர் பாதிக்கப்பட்ட காவிரி வடிநில பகுதியில் உள்ள மரவள்ளி பயிர் செய்யப்பட்ட வயல்களில் முகாமிட்டு இரவு நேரங்களில் படையெடுத்து வரும் மெழுகு வண்டுகளை பெரிய அளவிலான மின் விளக்குகள் அமைத்தும், இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் மின் விளக்கு பொறி உள்ளிட்ட பல்வேறு வகையான சாதனங்கள் வாயிலாக மெழுகு வண்டுகளை காட்டுப்படுத்திடும் முறை குறித்து விவசாயிகளுக்கு நேரிடை செய்முறை பயிற்சி அளித்தனர். 

முகாமில் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ரவி, கிருஷ்ணவேணி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அனுஷா, வேளாண் உதவி இயக்குநர் சுமதி உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர். 

Story image

பெரிய அளவிலான மின் விளக்குகள் அமைத்து மெழுகு வண்டுகளை காட்டுப்படுத்திட​  விவசாயிகளுக்கு நேரிடை செய்முறை பயிற்சி அளிக்கும் வேளாண் ஆராய்ச்சி குழுவினர்.

பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் தொடர்ந்து 10 நாள்களுக்கு இம்முறையில் மெழுகு வண்டுகளின் தாக்குதலை கட்டுப்படுத்திடுமாறு அவர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.