குடியிருப்போருக்கு அவர்களின் பயோமெட்ரிக் மற்றும் புள்ளிவிவரத் தரவுகள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் "ஆதார்" எனும் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படுகின்றது. தற்போது மனிதன் வாழ்வதற்கு ஆதார் அவசியம் என்பது எழுதப்படாத விதியாக மாறியுள்ளது. உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்க கூடாது என உத்தரவு போட்டிருந்தாலும், வங்கி கணக்கு துவங்கவும், புதிய செல்லிடைபேசி எண் பெறவும், வங்கிகள் மூலம் பணபரிமாற்றத்திற்கும், ரயிலில் முன்பதிவு செய்யவும் என அத்துனைக்கும் ஆதார் தேவைப்படுகிறது.