பஞ்சமுக நந்தீஸ்வரர் ஆலயத்துக்கு வடக்கே ஒரு வற்றாத சுனை உள்ளது. மரங்களின் அடியில் உள்ள இந்தச் சுனையில் உள்ள நீரையே விழாக் காலங்களில் குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.
மலைக் கோட்டையின் மதில் சுவரில் இருந்து மேற்கே பார்த்தால் மேற்கே ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலப் பகுதிகள் தெரிகின்றன. தெற்கு, கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் தமிழகத்தின் எல்லைப் பகுதிகள் தெரிகின்றன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் (வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை) இந்த மலைக் கோட்டைதான் உயரமான மலைக்கோட்டை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.