மதுரை: பழமையான மண்டலா ஓவியத்தை தமிழ் எழுத்துக்களுடன் 100 அடி நீளத்துக்கு வரையும் சாதனை முயற்சியை மதுரை மாணவர் தொடங்கியிருக்கிறார்.
மண்டலா ஓவியம் என்பது நான்காம் நூற்றாண்டு காலத்து பழமையான ஓவியம். இவை கணித சாஸ்திரங்களையும், தியான நியமங்களையும் அடிப்படையாகக் கொண்டு வரையக் கூடியவை. இந்த ஓவியங்கள் வரைவதால் மன அழுத்தம் குறையும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த ஓவியத்தில் சாதனை முயற்சியை மேற்கொண்டு வருகிறார் புது விளாங்குடியைச் சேர்ந்த ஹரீஷ் சக்தி (15). இவரது தந்தை அழகர்ராஜ், ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். தாய் உமாதேவி பள்ளி ஆசிரியை.
பத்தாம் வகுப்பு முடித்துள்ள ஹரீஷ் சக்தி கரோனா விடுமுறையை பயனுள்ளதாக்கிக்கொள்ள இந்த ஓவியத்தை இணைய வழியில் பழகி வந்துள்ளார். சிறுவயதில் இருந்தே நுண்கலைகள், வீட்டில் இருக்கும் பொருள்களில் இருந்து கைவினைப் பொருள் தயாரிப்பதில் ஆர்வம் உள்ள சக்தி, மண்டலா ஓவியத்தை எளிதில் கற்றுள்ளார்.
இதை சாதனையாக்கும் வகையில் இந்திய சாதனை புத்தக அமைப்பின் அனுமதியைப் பெற்று ஜூன் 24ஆம் தேதி இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளார்.
காலை 8 முதல் ஒரு மணி வரையும் பின்னர் மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் தினமும் பத்து மணி நேரத்துக்கு இந்த ஓவியம் வரைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல மூன்று நாட்களில் தினமும் 10 மணி நேரம் வீதம் 80 அடி நீளத்துக்கு ஓவியம் வரைய சாதனை புத்தக நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
தற்போது மூன்றாவது நாளாக ஓவியம் வரையும் சாதனையை வெள்ளிக்கிழமை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்த ஓவியத்தில் தமிழ் எழுத்துக்கள் நடுவில் இடம்பெறும் வகையிலும் அதைச் சுற்றிலும் மண்டலா ஓவியம் வரைந்து வருகிறார். அ..ஆ...வில் தொடங்கி தமிழின் 247 எழுத்துக்களும் இடம்பெறும் வகையில் இந்த நீண்ட ஓவியம் சென்று கொண்டிருக்கிறது.
இன்று இரவு ஒன்பது மணிக்கு சாதனை முயற்சியை நிறைவு செய்ய உள்ள நிலையில் இலக்கிற்கும் அதிகமாக சுமார் 100 அடி வரை ஓவியம் வரைய திட்டமிட்டுள்ளதாக அவரது தந்தை அழகர்ராஜ் கூறுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


