இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணியைப் புறக்கணித்து, நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:17 pm

த. பார்த்திபன்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணியைப் புறக்கணித்து, நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசு உடனடியாக தலையிட்டு காவிரி நீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியிலிருந்து உரிய நீரை திறந்து விட வேண்டும். கர்நாடகத்தில் தமிழர்கள், அவர்களது சொத்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதலை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆர். ராமசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர். கோவிந்தராஜ், செயலர் இ. மேரி ஜமீலா வெற்றிக்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.