சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

எஸ்.சி, எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் கல்வித் திருவிழா

எஸ்.சி., எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த  கல்வித் திருவிழா நிகழ்ச்சியில் 10,12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:38 am

எஸ். பாண்டியன்

எஸ்.சி., எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த  கல்வித் திருவிழா நிகழ்ச்சியில் 10,12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. 

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் எஸ்.சி, எஸ்.டி மத்திய, மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் 26-ம் ஆண்டு கல்வி திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாநில பொருளாளர் எ.சோலைமலை தலைமை வகித்தார். மதுரை மண்டல செயலாளர் அ.விஜயன், மாநில நிர்வாக ஆலோசகர் ஊர்க்காவலன், மாவட்டத் தலைவர் இல.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 10,12-வது வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் 5 பேரை பாராட்டி மாநில அமைப்பாளர் ச.கருப்பையா தங்க பதக்கங்களை வழங்கினார்.

அதேபோல், 10-ம் வகுப்பில் 475 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 8 பேருக்கும், 12-ம் வகுப்பில் 1100 மதிப்பெண்கள் மேல் எடுத்த 2 பேருக்கும் மதுரை மண்டல துணைத்தலைவர் எஸ்.ராமச்சந்திரன் ஆறுதல் பரிசுகளையும் வழங்கினார். இதில், பொறியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் செந்தூர்பாண்டியன், அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் பி.தேவேந்திரசாமி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நி்ர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை அனைத்து துறை மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் செய்திருந்தனர். அரசு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளர் ஸ்ரீராமர் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.