அரசு கருணை காட்டுமா? ஆனால் புத்தகத்தையே போராடிப் பெற்று, ஆசிரியர்களுடனேயே சேர்ந்து புதிய பாடங்களையும் கற்றுக் கொண்ட மாணவர்கள், கணிதத்தில் முழு மதிப்பெண்ணை எப்படிப் பெறுவது, தேர்ச்சி பெறுவதில் சிக்கல் இருக்குமோ என்ற கலக்கத்தில் உள்ளனர். 10-ம் வகுப்பு கணிதத் தேர்வு வரும் ஏப்ரல் 16-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்குள் கணிதத் தேர்வு வினாத்தாள் முறையை புத்தகத்துக்கு உள்ளே இருந்து கேட்கும் அடிப்படையில் மாற்றி அமைக்க அரசு ஆவன செய்யுமா, அல்லது வேறு ஏற்பாடுகளைச் செய்யுமா என்பதே கணித ஆசிரியர்கள்-பெற்றோர்-மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.