கீழ்பவானி பாசனப் பிரதான கால்வாயிலிருந்து வரும் கசிவு நீரைச் சேகரித்து பாசனத்திற்குப் பயன்படுத்தும் வகையில் ஈரோடு பெரும்பள்ளம் என்ற இடத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் 1964-ம் ஆண்டில் தடுப்பணை அமைக்கப்பட்டது. இந்த தடுப்பணையில் இருந்து பெரும்பள்ளம்-நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பாசன திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் காசிபாளையம், வெண்டிபாளையம், 46 புதூர், லக்காபுரம், முத்துக்கவுண்டம்பாளையம், சின்னியம்பாளையம் மற்றும் நஞ்சை ஊத்துக்குளி கிராமங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 2,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.