மசினகுடி உள்ளிட்ட பகுதிகள் முதுமலை புலிகள் காப்பகத்தின் உட்புறப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் அப்பகுதியில் மனித நடமாட்டமும், கால்நடை மேய்ச்சலும் தடை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் எடுப்பதற்கு சிறிய அளவிலான தடுப்பணைகளை அமைக்கவும், ஆழ்துளை குழாய் கிணறுகளை அமைக்கவும் அனுமதி மறுத்து வருகிறது வனத்துறை. ஆனால், சுமார் 40 கி.மீ. தூரத்திற்கு பாதுகாக்கப்பட்ட மிக முக்கிய வனப்பகுதிகள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைக்க பாறைகளை வெடி வைத்துத் தகர்ப்பதால் ஏற்படும் நில அதிர்வையும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் கண்காணிக்காதது ஏன் எனவும் வினா எழுப்பியுள்ளனர்.