தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

‌லாபம் கொழிக்கும் ரோஜா

பண்ருட்டி, ஜன. 27:  ரோஜா தோட்டத்தை முறையாக பராமரித்து வந்தால் ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் வரை லாபம் கிடைக்கும் என வேகாக்கொல்லை கிராமத்தைச்  சேர்ந்த ரோஜா சாகுபடி விவசாயிகள் கூறினர். கடலூர் மாவட்டம் பண்ருட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:59 am

பண்ருட்டி, ஜன. 27:  ரோஜா தோட்டத்தை முறையாக பராமரித்து வந்தால் ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் வரை லாபம் கிடைக்கும் என வேகாக்கொல்லை கிராமத்தைச்  சேர்ந்த ரோஜா சாகுபடி விவசாயிகள் கூறினர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள வேகாக்கொல்லை, பிள்ளைப்பாளையம், சத்திரம், வெங்கடாம்பேட்டை, அன்னதானம்பேட்டை, கன்னித்தமிழ்நாடு, பெலாத்தோப்பு, ஏ.புதூர், பாச்சாரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் ரோஜா, கனகாம்பரம், குண்டுமல்லி உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மலர்களை பண்ருட்டி, கடலூர், விருத்தாசலம், திண்டிவனம், சிதம்பரம் பகுதியில் உள்ள வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்வதாலும், நல்ல விலை போவதாலும் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் கூறினர்.

இது குறித்து வேகாக்கொல்லையைச் சேர்ந்த பார்த்திபன் நர்சரி உரிமையாளரும், விவசாயியுமான ஆர்.ராமகிருஷ்ணன் கூறியது:

25 ஆண்டுகளுக்கு முன் தான் இப் பகுதியில் மலர் உற்பத்தி செய்ய தொடங்கினர்.

நல்ல விளைச்சலும், விலையும் கிடைத்ததால் இன்று சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர் சாகுபடி செய்யப்படுகிறது.

நடவுக்கு தேவையான ரோஜா கன்றுகளை நாங்களே உற்பத்தி செய்துக் கொள்கிறோம். அல்லது உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் ஒரு கன்று ரூ.2 என வாங்கி நடவு செய்வோம். ஒரு ஏக்கருக்கு சுமார் 1500 கன்றுகள் தேவைப்படும்.

கன்று நட்ட 3-ம் மாதம் முதல் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பலன் தரும். ஆண்டுக்கு சராசரி செலவுகள் போக ரூ.90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை லாபம் கிடைக்கும்.

உற்பத்தி செய்த மலர்களை மொத்தமாக வியாபாரிகளிடம் விற்பனை செய்வதால் அவர்கள் இட்டதுதான் விலை.

மேலும் விற்பனைக் கழிவு வேறு தர வேண்டும். எனவே விவசாயிகள் நேரிடையாக மலர்களை விற்பனை செய்தால் மேலும் அதிக லாபம் கிடைக்கும் என விவசாயி ஆர்.ராமகிருஷ்ணன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.