காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ரொனால்டோ 2 கோல்கள்; போர்ச்சுகல் அபார வெற்றி: மறைந்த வீரருக்கு மரியாதை!

உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகலின் அபார வெற்றி குறித்து...

News image
கோல் அடித்த மகிழ்ச்சியில் ரொனால்டோ. - படம்: ஏபி
Updated On :7 செப்டம்பர் 2025, 6:16 am

இணையதளச் செய்திப் பிரிவு

உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகலின் அணி 5-0 என அபார வெற்றி பெற்றது.

40 வயதிலும் ரொனால்டோவின் அசத்தலான கோல்களால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அர்மீனியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகல் அணி 5-0 என அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஜாவோ பெலிக்ஸ் 10, 61ஆவது நிமிஷங்களில் கோல் அடிக்க, ரொனால்டோ 21,46-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்.

ஜாவோ கன்செலோ 32-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார். இந்தப் போட்டியில் 72 சதவிகித பந்தினை போர்ச்சுகல் அணி தன் கட்டுக்குள் வைத்திருந்தது.

குரூப் எஃப் அணிகளில் முதல் அணியாக போர்ச்சுகல் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ரொனாடோ மொத்தமாக 942 கோல்களும் சர்வதேச போட்டிகளில் 140 கோல்களையும் நிறைவு செய்துள்ளார்.

மறைந்த வீரருக்கு மரியாதை

கார் விபத்தில் மறைந்த தியாகோ ஜோடாவிற்கு போர்ச்சுகல் அணியினரும் ரசிகர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

கோல் அடுத்து சில வீரர்கள் ஜோடாவின் பாணியில் கொண்டாடிதும் சமூக வலைதளத்தில் வைரலானது.

summary

Portugal's team won a resounding 5-0 in the World Cup qualifier.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.