திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ரபாடா மேல்முறையீடு மார்ச் 19-ல் விசாரணை: 48 மணிநேரத்தில் தீர்ப்பு!

2 டெஸ்ட் போட்டிகளில் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ரபாடா செய்திருந்த மேல்முறையீடு தொடர்பாக மார்ச் 19-ல் விசாரணை நடத்தப்படவுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:29 pm

Raghavendran

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரின் 2-ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா செய்த காரியத்தால் அவருக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல் இன்னிங்ஸின் 52-ஆவது ஓவரில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மீது உரசியபடிச் சென்றார் ரபாடா. இதுதொடர்பாக கள நடுவர்கள் போட்டி நடுவரிடம் புகார் அளித்தனர். அதுபோல 2-ஆவது இன்னிங்ஸிலும் டேவிட் வார்னரின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். இதையும் நடுவர்கள் புகார் செய்தனர்.

இதுதொடர்பாக போட்டி நடுவர் நடத்திய விசாரணையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இதனால் ரபாடா மீது ஐசிசி விதி லெவல் 2-ன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. மேலும் அவருக்கு தண்டனைப் புள்ளிகள் 8-ஆகவும் அதிகரித்தது. எனவே போட்டி ஊதியத்தில் 50 சதவீத அபராதம், அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்தது.

இந்நிலையில், தன் மீதான தடையை எதிர்த்து ரபாடா மேல்முறையீடு செய்தார். இதுதொடர்பான விசாரணை வருகிற மார்ச் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விசாரணை அதிகாரியாக நியூஸிலாந்தைச் சேர்ந்த மைக்கெல் ஹெரான் ஐசிசி-யால் நியமிக்கப்பட்டுள்ளார். விடியோ கான்ஃப்ரன்சிங் முறையில் நடத்தப்படும் இவ்விசாரணை தொடர்பான தீர்ப்பு அடுத்த 48 மணிநேரங்களில் வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.