/

இந்திய கிரிக்கெட் வீரர்களின் தேர்வில் இடஒதுக்கீடு: மத்திய இணையமைச்சர் யோசனை!

இந்திய கிரிக்கெட் வீரர்களின் தேர்வில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ்... 

News image
Updated On :1 ஆகஸ்ட் 2017, 10:55 am

இந்திய கிரிக்கெட் வீரர்களின் தேர்வில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அதாவலே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வில் இடஒதுக்கீடு கடைப்பிடிப்பது குறித்து யோசிக்கவேண்டும். இதுகுறித்து நான் முதல்முறையாக இப்போது பேசவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்பு இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன். இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயலிடம் பேசவுள்ளேன் என்றார்.

மேலும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து குறித்து பேசிய ராம்தாஸ் அதாவலே, எனக்கு அந்தத் தோல்வியில் சந்தேகம் உள்ளது. அதற்கு முன்பு பாகிஸ்தானை எளிதாகத் தோற்கடித்தோம். எனவே இறுதிசுற்றில் தோற்றது சந்தேகத்தை உருவாக்குகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.