திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆர்சிபியின் சிறப்பான பேட்டிங்குக்கு யார் காரணம்? மனம் திறந்த க்ருணால் பாண்டியா!

ஆர்சிபியின் சிறப்பான பேட்டிங்குக்கு காரணம் யார் என்பதை க்ருணால் பாண்டியா தெரிவித்தார்.

News image

க்ருணால் பாண்டியா - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 5:05 pm IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அனியின் சிறப்பான பேட்டிங்குக்கு காரணம், பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்தான் என ஆர்சிபி ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே 10) நடந்த இரண்டாவது போட்டியில், முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் காலில் கடுமையான தசைப்பிடிப்பால் அவதிப்பட்டும், ஏறக்குறைய ஒற்றைக் காலில் நின்றுகொண்டும் பேட்டிங் செய்த க்ருணால் பாண்டியா, 46 பந்துகளில் 73 ரன்கள் விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இதுகுறித்து ஆட்டத்துக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் க்ருணால் பாண்டியா தெரிவித்ததாவது:

“அணியின் செயல்திறனில் கடந்த ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்தாண்டு ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், சிறப்பான பேட்டிங்குக்கான பாராட்டுகள் அனைத்தும் தினேஷ் கார்த்திக்கையேச் சேரும்.

அவர் ஒவ்வொரு வீரருடனும் தனிப்பட்ட முறையில் அதிக நேரம் செலவழிக்கிறார். அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொண்டு, அவற்றைச் சரிசெய்கிறார். பேட்டர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கிறார். எனவே, எங்கள் அணியின் சிறப்பான ஆட்டத்த்துக்கு, தினேஷ் கார்த்திக்கின் பங்கு பெருமளவில் உண்டு என்பதில் சந்தேகமில்லை.

எங்களால் ரன்கள் அடிக்க முடியும் என்று நாங்கள் உணரும் ஒரு பந்துவீச்சாளர் இருந்தால், அவர் வீசும் ஆறு பந்துகளையும் சரியாக எதிர்கொண்டு விளையாடுவோம் என்று பேசியிருக்கிறோம்.

அந்தச் சூழ்நிலையில்தான், நான் களத்தில் இருந்தேன். ஆனால் தசைப்பிடிப்புகள் காரணமாக, ஒன்றிரண்டு ரன்கள் எடுப்பது கடினமாகி வருவதை உணர்ந்தேன். அதனால், ’அப்படியே நின்று ஆறு பந்துகளையும் எதிர்கொண்டு, என்னால் முடிந்ததை எல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வோம்' என்று நினைத்தேன்” எனத் தெரிவித்தார்.

Summary

RCB all-rounder Krunal Pandya has stated that batting coach Dinesh Karthik is the reason behind the Royal Challengers Bangalore team's excellent batting performance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.