மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆர்சிபி என் டிஎன்ஏவின் ஒரு பகுதியாக எப்போதும் இருக்கும்: விஜய் மல்லையா

ஆர்சிபி அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா பேசியது குறித்து...

News image

ஆர்சிபி அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா. - ENS

Updated On :26 மார்ச் 2026, 12:32 pm

ஆர்சிபி அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா, “ஆர்சிபி எப்போதும் எனது டிஎன்ஏவின் ஒரு பகுதியாகவே இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

ஆர்சிபி அணியை ரூ.166.6 பில்லியன் (ரூ.16,660 கோடி) இந்தியாவின் ஆதித்யா பிர்லா, டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களான போல்ட் வென்சுரீஸ், பிளாக்ஸ்டோன் நிறுவனங்கள் வாங்கியுள்ளன.

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக கடந்தாண்டு ஐபிஎல் கோப்பையை ரஜத் படிதார் தலைமையில் வென்றது. 2008 முதல் இந்த அணியின் உரிமையாளராக தொழிலதிபர் விஜய் மல்லையா இருந்து வந்தார்.

ஆர்சிபி அணி முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடன் மார்ச் 28ஆம் தேதி மோதுகிறது. புதிய நிறுவனங்கள் ஆர்சிபி அணியை வாங்கிய நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் மல்லையா பதிவில் கூறியிருப்பதாவது:

ஆர்சிபியின் புதிய உரிமையாளர்களுக்கு இதயப்பூர்வமாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் மதிப்புமிக்க ஐபிஎல் அணியை வாங்கியவருக்கு நல்லது நடக்க வாழ்த்துகள்.

ஆர்சிபி அணியை 2008ல் ரூ.450 கோடிக்கு வாங்கியபோது பலரும் என்னைப் பார்த்து சிரித்தார்கள். தவறான முதலீடு என்றும் விமர்சித்தார்கள். ராயல் சேலஞ் என்ற வணிக உரிமைப் பெயர் மீதிருந்த காதலால் ஆர்சிபி எனப் பெயரிட்டேன். ரூ.450 கோடி முதலீடு தற்போது ரூ.16,500 கோடியாக வளர்ந்திருப்பது மிகவும் மன நிறைவு தருகிறது.

துடைத்தழிக்க இயலாத நினைவுகளுடன் ஆர்சிபி எப்போதுமே எனது டிஎன்ஏவின் ஒரு அங்கமாக இருக்கும். உலகத்தின் சிறந்த வீராரக இருக்கும் இளம் வீரர் விராட் கோலியைத் தெர்வு செய்ததும் மற்றக்க முடியாது. எனது உரிமையில் இருக்கும்போது அணிக்கு வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து எப்போதும் பெங்களூரின் சிங்கமான ஆர்சிபிக்கு ஆதரவாக இருங்கள் என்றார்.

Summary

RCB will always remain a part of my DNA...: Vijay Mallya reacts on IPL franchise's blockbuster sale.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.