பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா போராட்டம் வீண்: உலகக் கோப்பையில் 2-ஆவது தோல்வி!

ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பையின் 11-ஆவது போட்டி குறித்து...

News image

பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா. - படம்: ஏஎஃப்பி

Updated On :18 ஜூன் 2026, 3:23 pm IST

ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பையின் 11-ஆவது போட்டியில் பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் பிர்மிங்கமில் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் ஃபாத்திமா சனா 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென்னாப்பிரிக்கா சார்பில் மரிசான் காப் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அடுத்து பேட்டிங் விளையாடிய இந்த அணி 16.5 ஓவர்களில் 127/8 ரன்கள் எடுத்து வென்றது.

அதிகபட்சமாக அன்னரி டெர்க்ஸன் 52 ரன்கள் குவித்தார். நடினே டி கிளார்க் 37 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். பாகிஸ்தான் சார்பில் ஃபாதிமா சனா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

ஃபாத்திமா சனா பேட்டிங், பந்துவீச்சில் தனியாளாகப் போராடினார். இருந்தும், பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது போட்டியிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

குரூப் ஏ புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றன.

Summary

Pakistan captain Fatima Sana's fighting effort goes in vain; South Africa secures a stunning victory! T20 world cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.