இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

உலகக் கோப்பையின் முதல் போட்டி: வெற்றியுடன் தொடங்கியது மெக்சிகோ!

கால்பந்து உலகக் கோப்பையின் முதல் போட்டியில் வென்ற மெக்சிகோ அணி குறித்து...

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் மெக்சிகோ அணியினர். - படம்: எக்ஸ் / ஃபிஃபா உலகக் கோப்பை

Updated On :12 ஜூன் 2026, 11:29 am IST

கால்பந்து உலகக் கோப்பையின் முதல் போட்டியில் மெக்சிகோ அணி 2-0 என அசத்தல் வெற்றி பெற்றது.

மிகவும் கோலகலமாகத் தொடங்கிய உலகக் கோப்பையின் முதல் போட்டியில் தனது சொந்த மண்ணில் விளையாடிய மெக்சிகோ அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.

தொடக்கதிலேயே அழுத்தத்தை ஏற்படுத்திய மெக்சிகோ அணி 9ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தியது. முதல் பாதியில் 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் மெக்சிகோ அணியின் ஜிமினேஸ் 67-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார். இறுதிவரைக்கும் போராடிய தென்னாபிரிக்க அணி ஒரு கோல்கூட அடிக்க மெக்சிகோ அணி இடம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் 61 சதவிகிதம் பந்தை மெக்சிகோ அணியினர் தனது வசம் வைத்திருந்தார்கள். பந்தை கடத்தும் திறனில் மெக்சிகோ அணியினர் 91 சதவிகித துல்லியமாக இருந்ததும் வியக்கவைத்தது.

முதல் கோல் அடித்த மெக்சிகோவின் ஜூலியன் குவினோன்ஸுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Summary

Mexico gets off to roaring World Cup start with 2-0 win over South Africa in opening match

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.