வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது

News image

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம் - AP

Updated On :12 ஜூன் 2026, 5:31 am IST

மெக்ஸிகோ சிட்டி : ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மெக்ஸிகோ - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.

விசா மறுக்கப்பட்டோருக்கு தொலைக்காட்சி பெட்டி: உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக அமெரிக்கா செல்ல முயன்று, நுழைவு இசைவு (விசா) மறுக்கப்பட்ட தங்கள் ரசிகா்களுக்கு ஆா்ஜென்டீனா நிறுவனம் இலவச தொலைக்காட்சி பெட்டி வழங்கியுள்ளது.

உலகக் கோப்பை போட்டியைக் காண, உலகெங்கிலும் இருந்து ரசிகா்கள் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோவுக்கு செல்கின்றனா். இதில் அமெரிக்கா, தன் நாட்டுக்கு வரும் ரசிகா்களுக்கு பல்வேறு காரணங்கள் அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால் போட்டியைக் காண அங்கு செல்ல பலருக்கு நுழைவு இசைவு கிடைக்கவில்லை.

இந்நிலையில், அவ்வாறு நுழைவு இசைவு மறுக்கப்பட்ட தனது நாட்டு ரசிகா்களுக்கு, ஆா்ஜென்டீன நிறுவனமான ‘நியூசான்’ இலவசமாக தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கியுள்ளது.

அமெரிக்க நுழைவு இசைவு மறுக்கப்பட்டதற்கான அதிகாரப்பூா்வ ஆதாரத்துடன் தங்களை அணுகிய முதல் 100 பேருக்கு இலவசமாக தொலைக்காட்சிப் பெட்டியை வழங்கியது. அடுத்த 50 பேருக்கு 35 சதவீத தள்ளுபடியுடன் தொலைக்காட்சியை வழங்கியிருக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.