ஐபிஎல் 2025 கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு பிசிசிஐ ஒழுங்காணையம், நெறிமுறை அதிகாரி கூட்டநெரிசலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டம் ஜூன் 4ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்றது.
அந்தக் கொண்டாட்டத்தில் சின்னசாமி கிரிக்கெட் திடலுக்கு முன்பாக ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 போ் உயிரிழந்தனா்.
ஐபிஎஸ் அதிகாரி விகாஸ் குமார் அளித்த புகாரின் பேரில் இது குறித்து, பிசிசிஐ ஒழுங்காணையம், நெறிமுறை அதிகாரி அருண் மிஸ்ரா ஆர்சிபி அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கும் விளக்கம் கேட்டு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அந்தச் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கூட்ட நெரிசலின் தன்மையைக் கருத்தில்கொண்டு, இந்தப் புகாருக்கு சம்பந்தப்பட்ட ஆர்சிபி அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கமும் தங்களது விளக்கத்தை எழுத்துபூர்வமாக சமர்பிக்க வேண்டும்.
இந்தப் புகார் ஜூன் 4ஆம் தேதி சின்னசாமி திடலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலி குறித்து பதியப்பட்டுள்ளது. அதில் ஆர்சிபி அணியின் நிர்வாகம் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புகார் தெரிவித்தவர் தவறுகளுக்கு ஆர்சிபி அணி பொறுப்பேற்கும்படி தெரிவித்துள்ளார். மேலும், ஆர்சிபி அணியை தடைசெய்யவும் தற்போது நடைபெறும் விற்பனை பேச்சுவார்த்தைகளை செல்லாததாக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் புகாரில் ஆர்சிபி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரி விகாஸ் குமார் மீதான பணியிடை நீக்கத்தை தடைசெய்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
IPL champions Royal Challengers Bengaluru have landed in further trouble after BCCI Ombudsman-cum-Ethics Officer Justice (Retd) Arun Mishra directed the franchise, along with the Karnataka State Cricket Association (KSCA), to file written submissions over gross negligence during the team's victory celebrations in Bengaluru, which led to the death of 11 people.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி பந்துவீச்சு: பச்சை நிற ஜெர்ஸியுடன் களமிறங்கும் ஆர்சிபி!
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

ஆர்சிபி என் டிஎன்ஏவின் ஒரு பகுதியாக எப்போதும் இருக்கும்: விஜய் மல்லையா
ஆர்சிபி பேரணியில் பலியான ரசிகர்களுக்காக சின்னசாமி திடலில் 11 காலி இருக்கைகள்!
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


