மன வயலில் விளைந்த சிந்தனை மணிகள்; டி.எஸ்.தியாகராசன்; பக். 264; ரூ.250; நர்மதா பதிப்பகம்; சென்னை-17; ✆ 044-24334397.
தினமணி நாளிதழில் ஆசிரியர் உரைப்பக்க கட்டுரைகள் பகுதியில் இடம்பெற்ற நூலாசிரியரின் 41 கட்டுரைகளின் தொகுப்பு. 2-ஆவது பாகமாக வெளிவந்துள்ள இந்நூலில் உள்ள கட்டுரைகள் மொழிப் பற்றையும், தேசப்பற்றையும் ஊக்குவிக்கும் கருத்துச் செறிவுகள் நிறைந்தவை. கல்விப் பணி, கலாசார பணி, இலக்கியப் பணி எனப் பல தளங்களில் அனுபவம் கொண்டவர் நூலாசிரியர் என்பதால், ஒவ்வொரு கட்டுரையிலும் அந்த அனுபவம் பிரதிபலிக்கிறது.
"நாட்டில் கைநாட்டு இடும் பாமரனும், அரைகுறையாகப் படித்தவர்களும் செய்கிற குற்றங்களைக் காட்டிலும் மெத்தப் படித்தவர்களும் ஆணையிடவல்ல அதிகாரம் பெற்றவர்களும் செய்யும் குற்றங்கள்தான் அதிகம்' என்பதை ஆணித்தரமாக ஆதாரங்கள் தரவுகளுடன் சுட்டிக்காட்டுகிறது "அஃகி அகன்ற அறிவு என்னாம்?' என்ற கட்டுரை.
மொகலாய மன்னர் அக்பரால் போரில் வெல்ல முடியாதவர் ராஜபுத்திர அரசர் மேவார் நாட்டு ராணா பிரதாப் சிங். அவர் தாய்மண்ணை நேசித்த பண்பை, வீரத்தை நம் நாட்டுக் குழந்தைகளுக்கு போதித்திருந்தால் பாரதம் இப்போதும் அடிமைத்தன சிந்தனையுடன் தொடர்ந்திருக்காது என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது "நாட்டுப்பற்றும் பாடத்திட்டமும்' என்ற கட்டுரை.
பாரதத்தின் பெருமை ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் கோயில்கள். அத்தகைய பெருமையைப் போற்றி பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும் மக்களுக்கும் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது "காலப் பழைமையும் சாலப் பெருமையும்' என்ற கட்டுரை.
ஆய்ந்தறிந்து எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டுரையிலுமே நூலாசிரியரின் அறச்சீற்றம் வெளிப்படுகிறது. வாசிப்பவர்களின் மனசாட்சியிடம் அழுத்தமான கேள்விகளையும் எழுப்புகிறது.
மன வயலில் விளைந்த சிந்தனை மணிகள்; டி.எஸ்.தியாகராசன்; பக். 264; ரூ.250; நர்மதா பதிப்பகம்; சென்னை-17; ✆ 044-24334397.
தினமணி நாளிதழில் ஆசிரியர் உரைப்பக்க கட்டுரைகள் பகுதியில் இடம்பெற்ற நூலாசிரியரின் 41 கட்டுரைகளின் தொகுப்பு. 2-ஆவது பாகமாக வெளிவந்துள்ள இந்நூலில் உள்ள கட்டுரைகள் மொழிப் பற்றையும், தேசப்பற்றையும் ஊக்குவிக்கும் கருத்துச் செறிவுகள் நிறைந்தவை. கல்விப் பணி, கலாசார பணி, இலக்கியப் பணி எனப் பல தளங்களில் அனுபவம் கொண்டவர் நூலாசிரியர் என்பதால், ஒவ்வொரு கட்டுரையிலும் அந்த அனுபவம் பிரதிபலிக்கிறது.
"நாட்டில் கைநாட்டு இடும் பாமரனும், அரைகுறையாகப் படித்தவர்களும் செய்கிற குற்றங்களைக் காட்டிலும் மெத்தப் படித்தவர்களும் ஆணையிடவல்ல அதிகாரம் பெற்றவர்களும் செய்யும் குற்றங்கள்தான் அதிகம்' என்பதை ஆணித்தரமாக ஆதாரங்கள் தரவுகளுடன் சுட்டிக்காட்டுகிறது "அஃகி அகன்ற அறிவு என்னாம்?' என்ற கட்டுரை.
மொகலாய மன்னர் அக்பரால் போரில் வெல்ல முடியாதவர் ராஜபுத்திர அரசர் மேவார் நாட்டு ராணா பிரதாப் சிங். அவர் தாய்மண்ணை நேசித்த பண்பை, வீரத்தை நம் நாட்டுக் குழந்தைகளுக்கு போதித்திருந்தால் பாரதம் இப்போதும் அடிமைத்தன சிந்தனையுடன் தொடர்ந்திருக்காது என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது "நாட்டுப்பற்றும் பாடத்திட்டமும்' என்ற கட்டுரை.
பாரதத்தின் பெருமை ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் கோயில்கள். அத்தகைய பெருமையைப் போற்றி பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும் மக்களுக்கும் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது "காலப் பழைமையும் சாலப் பெருமையும்' என்ற கட்டுரை.
ஆய்ந்தறிந்து எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டுரையிலுமே நூலாசிரியரின் அறச்சீற்றம் வெளிப்படுகிறது. வாசிப்பவர்களின் மனசாட்சியிடம் அழுத்தமான கேள்விகளையும் எழுப்புகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரப்பெற்றோம் (20-04-2026)

இந்தியச் சரித்திரத்தின் இமாலயத் தவறுகள்

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


