மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இந்தியச் சரித்திரத்தின் இமாலயத் தவறுகள்

பிழைகளைத் திருத்தி உண்மைகளைப் புரிந்து நம் சரித்திரத்தின் புனிதத்தை வெளியுலகுக்குச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதை உணர்த்துகிறது இந்நூல்.

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 11:18 am

இந்தியச் சரித்திரத்தின் இமாலயத் தவறுகள்-சக்திவேல் ராஜகுமார், பக். 160; ரூ. 200; சுவாசம் பதிப்பகம், சென்னை-600 127, ✆ 81480 66645.

நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாத ஒரு பேரரசனை சூழ்ச்சியால் வென்ற கதைகள் பல உண்டு. அதுபோல இந்தியாவைக் கைப்பற்ற நினைத்த அந்நியர்கள் கையிலெடுத்த ஆயுதங்களில் ஒன்றுதான் 'வரலாற்றைத் திருத்தி அமைத்தல்' என்னும் உத்தி. அதைத்தான் நூலாசிரியர் ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

பாரத தேசத்து மன்னர்களின் அறச் செயல்பாடுகளையும், வெற்றிகளையும் புறக்கணித்து அதன் உண்மைத் தன்மையை நீர்த்துப்போகச் செய்த சூழ்ச்சிகளை வாசிக்கும்போது, நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது; வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்குகிறது.

இன்று நமது சிகை அலங்காரம் முதல் சிந்திக்கும் திறன் வரை அனைத்திலும் அந்நியர்கள் புகுந்துவிட்டார்கள். இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த மெக்காலே நமது நாட்டின் ஆன்மிகம் மற்றும் கலாசாரத்தை உடைக்காதவரை இந்த நாட்டை வெல்ல முடியாது என்கிற ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் அளவுக்கு அவர்களின் சூழ்ச்சியின் வீரியம் இருந்திருக்கிறது.

அலெக்ஸாண்டர், ஆரியர்கள், சம்ஸ்கிருத மொழி, அக்பர், திப்பு சுல்தான், சாவர்கர், உண்மையான இந்தியச் சுதந்திரப் போர், முகலாயர்கள் ஆட்சி உள்ளிட்டவை குறித்த உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு, தவறான சரித்திரம் உரைக்கப்பட்டு வருகிறது என்பதை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

பிழைகளைத் திருத்தி உண்மைகளைப் புரிந்து நம் சரித்திரத்தின் புனிதத்தை வெளியுலகுக்குச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதை உணர்த்துகிறது இந்நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.