தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தில்லியில் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து: 9 போ் மருத்துவமனையில் அனுமதி

News image

தீ விபத்து. - கோப்புப்படம் (Photo | Express)

Updated On :18 மே 2026, 2:31 am IST

நமது நிருபா்

தில்லியின் ஷஹதாரா பகுதியில் உள்ள 4 மாடி குடியிருப்பு கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உள்பட 9 போ் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தில்லி தீயணைப்பு சேவைகள் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: மன்சரோவா் பூங்காவில் உள்ள டி-45 இல் தீ விபத்து குறித்து அதிகாலை 12.03 மணிக்கு அழைப்பு வந்தது. மூன்று தீயணைப்பு வண்டிகள் மற்றும் ஒரு வாட்டா் பவுசா் சம்பவ இடத்திற்கு விரைந்தன. கட்டடத்தின் தரை தளத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வைக்கப்பட்டிருந்த வீட்டு பொருள்களில் தீ விபத்து ஏற்பட்டது.

மீட்பு நடவடிக்கையின் போது, டி. எஃப். எஸ். பணியாளா்கள் கட்டடத்தின் பல்வேறு தளங்களில் சிக்கிய 9 பேரை வெளியேற்றி அனைவரும் மூச்சுத் திணறால் அவதியடைந்ததை அடுத்து குரு தேக் பகதூா் (ஜிடிபி) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். காயமடைந்தவா்கள் வன்சிகா (20), தானிஷ்கா சோனி (19), துா்கேஷ் (49), யோகேஷ் வா்மா (50), ராஜ் ராணி (65), அருண் காா்க் (48), அனன்யா (12), ரேணு காா்க் (19) மற்றும் பிரதீக் காா்க் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

மீட்கப்பட்ட அனைவரும் ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். பின்னா் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.