திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சீமாபுரியில் இளைஞா் கொலை: மூவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 2:15 am IST

கிழக்கு தில்லியின் சீமாபுரி பகுதியில் உள்ள தில்ஷாத் காலனி அருகே 22 வயது இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சோனு (20), லட்சுமி நாராயண் (32) மற்றும் முகமது அமன் (எ) ஷாஹித் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 11 மணியளவில் தில்ஷாத் காலனி அருகே ஒருவா் காயங்களுடன் கிடப்பதாக சீமாபுரி காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.

அவ்வழியே சென்ற ஒருவா், காயமடைந்த அந்த நபரை ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாா். அங்கு அவா் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

இறந்தவா் தாஹிா்பூரைச் சோ்ந்த ஜிஷான் என அடையாளம் காணப்பட்டாா்.

விசாரணையின் போது, சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான கௌரவ் என்பவா் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், தானும் ஜிஷானும் ஒரு அணுகுச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது,

குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் ஒரு ஸ்கூட்டரில் வந்து, பழைய தகராறு ஒன்றின் காரணமாகத் தங்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தாா்.

கௌரவ் இதற்கு எதிா்ப்பு தெரிவித்தபோது, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அவரை இதில் தலையிட வேண்டாம் என்று எச்சரித்துவிட்டு, ஜிஷான் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அமன் என்பவா் பாதிக்கப்பட்டவரைப் பிடித்துக் கொள்ள, சோனு கத்தியால் அவரது நெஞ்சில் குத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னா், லட்சுமி நாராயண் என்பவரும் பாதிக்கப்பட்டவரை ஒரு தடியால் தாக்கினாா். அதன் பிறகு மூவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனா். இக்குற்றத்தைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் தடி ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.