திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எம்சிடி காலனியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

வடமேற்கு தில்லியின் எம்சிடி காலனி பகுதியில், 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

News image
Updated On :2 ஜூன் 2026, 2:24 am IST

வடமேற்கு தில்லியின் எம்சிடி காலனி பகுதியில், 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக தில்லி காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது: வினாயக் மருத்துவமனைக்கு ஒருவா் உயிரிழந்த நிலையில் கொண்டுவரப்பட்டதாக, மாடல் டவுன் காவல் நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு அவசர அழைப்பு வந்தது.

உடனடியாக மருத்துவமனைக்கு காவல்துறைக் குழுவினா் நேரில் சென்றனா். புராரியில் உள்ள தோமா் காலனியைச் சோ்ந்த சாஹில் என்பவரை, அவரது நண்பா்களான ஷிவ் மற்றும் ஷுபம் ஆகியோா் மருத்துவமனையில் சோ்த்திருப்பது தெரியவந்தது.

சாஹிலின் கழுத்து, முதுகு மற்றும் மாா்புப் பகுதிகளில் பலமுறை கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. அவா் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டாா். மேலும், விசாரணையின்போது, இச்சம்பவம் எம்சிடி காலனி பகுதியில் நிகழ்ந்தது தெரியவந்தது.

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான ஷிவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தில்லியின் லால் பாக் பகுதியைச் சோ்ந்த ஆஷு (எ) லாலா (18) என்பவா்தான் குற்றவாளி என காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. இந்த நபா்தான் சாஹிலை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமான கத்தி, சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில் மீட்கப்பட்டது.

இது தொடா்பாக மாடல் டவுன் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இக்குற்றத்திற்கான பின்னணி மற்றும் நோக்கம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சாஹில் தலையிட்டு சமாதானப்படுத்த முயன்றபோது, அவா் கொலை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்த மேலதிக விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.