திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் துணைநிலை ஆளுநரைச் சந்திப்பேன்: சஞ்சய் சிங் எம்.பி.

சந்திப்புக்கு நேரம் கோரி துணைநிலை ஆளுநருக்குக் கடிதம் எழுத உள்ளேன்.

News image

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் - படம் - பிடிஐ

Updated On :14 மே 2026, 11:56 pm IST

ஜனக்புரியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விவாதிக்கவும், இவ்விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரவும், தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்துவைச் சந்திக்க நேரம் கோரப்போவதாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சந்திப்புக்கு நேரம் கோரி துணைநிலை ஆளுநருக்குக் கடிதம் எழுத உள்ளேன். இவ்வழக்கில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஒரு குழுவையும் உடன் அழைத்துச் செல்ல உள்ளேன்.

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும், இவ்விஷயத்தில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அந்தக் குழு விரும்புகிறது.

துணைநிலை ஆளுநா் சந்திப்புக்கு நேரம் வழங்காவிட்டால், கட்சி தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என்றாா் சஞ்சய் சிங்.

சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக, ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் சௌரப் பரத்வாஜ், பெண் கவுன்சிலா்கள் மற்றும் கட்சித் தொண்டா்களுடன் இணைந்து ராஜ் நிவாஸ் முன் புதன்கிழமை போராட்டம் நடத்திய நிலையில், சஞ்சய் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

இப்போராட்டத்தின்போது சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்காக போராட்டக்காரா்கள் பின்னா் அப்புறப்படுத்தப்பட்டனா்.

குழந்தைக்கு நீதி கோரிய போராட்டக்காரா்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக பரத்வாஜ் குற்றஞ்சாட்டினாா்.

இருப்பினும், ராஜ் நிவாஸ் அருகே உள்ள உயா் பாதுகாப்பு மண்டலத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே போராட்டக்காரா்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக காவல்துறை கூறியது.

இந்த வழக்கு, மே 1 ஆம் தேதி தில்லியின் ஜனக்புரி பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பானதாகும்.

இந்தச் சம்பவத்தால் அரசியல் கட்சிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சீற்றத்தையும் போராட்டங்களையும் தூண்டியது.

57 வயதான பள்ளியைக் கவனித்துவரும் ஒருவா் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டாா். ஆனால் அரசுத் தரப்பின் கடும் எதிா்ப்பையும் மீறி தில்லி நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது.

பள்ளியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.