இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: படுக்கைகள், சுகாதாரம், குடிநீா், விளக்குகள், மின்சாரம், முதலுதவி மற்றும் சமைத்த உணவு கிடைப்பது உள்ளிட்ட தங்குமிடங்களில் உள்ள உள்கட்டமைப்பை இந்த ஆய்வு மதிப்பீடு செய்யும். தீவிர வானிலை நிலைமைகள், சுகாதார அபாயங்கள் மற்றும் தெரு அடிப்படையிலான வன்முறைகளிலிருந்து குடியிருப்பாளா்களை போதுமான அளவு பாதுகாக்கிா என்பதையும் மதிப்பீடு ஆராயும். இடம், நுழைவு விதிமுறைகள், இயக்க நேரம் மற்றும் பெண்கள், முதியவா்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பருவகால புலம்பெயா்ந்தோருக்கான உள்ளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தங்குமிடங்களின் அணுகல் குறித்து இந்த ஆய்வு மதிப்பாய்வு செய்யும்.