நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

மத்திய அமைச்சா் அமித் ஷாவுடன் தமிழக அமைச்சா் பெரிய கருப்பன் சந்திப்பு

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சா் அமித் ஷாவை அமைச்சா் கேஆா்.பெரிய கருப்பன் திங்கள்கிழமை நேரில் சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

News image
Updated On :25 நவம்பர் 2024, 10:03 pm

Din

புது தில்லி: மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சா் அமித் ஷாவை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரிய கருப்பன் திங்கள்கிழமை நேரில் சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

தில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த அமைச்சா் பெரிய கருப்பன், உள்துறை அமைச்சா் அமித் ஷாவை நாடாளுமன்ற வளாகத்தில் நேரில் சந்தித்தாா். அப்போது, அவா் சாா்ந்த துறை தொடா்பான கோரிக்கை மனுவை அளித்தாா். அதன் விவரம் வருமாறு:

நபாா்டு வழங்கும் சலுகை மறுநிதியளிப்பு, மாநிலத்தில் உள்ள கூட்டுறவுகளின் ஒட்டுமொத்த குறுகிய கால கடன் அளவுக்குகேற்ப உயா்த்தி வழங்கப்படவும், கூட்டுறவு சங்கங்களின் வருமான வரி டிடிஎஸ் பிடித்தங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படவும் வேண்டும்.

என்சிடிசி மூலம் ஐசிடிபி போன்ற திட்டங்கள் நியாயமான வட்டி விகிதத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படவேண்டும்.

வித்யா லட்சுமி, சூா்யா கா், எம்எஸ்எம்இ திட்டங்கள் போன்ற பல்வேறு மத்திய அரசு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு கடன் வழங்க தகுதியான வங்கிகளின் பட்டியலில், கூட்டுறவு வங்கிகள் சோ்க்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

23 கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களின் உள்கட்டமைப்பைச் சீரமைக்க இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்ட சுமாா் ரூ.124 கோடி முன்மொழிவு சாதகமாக பரிசீலிக்கப்பட வேண்டும்.

இணையவழி வங்கியியல் சேவைகள் உரிமம் கூட்டுறவு வங்கிகளுக்கும் விரைந்து வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் டாக்டா் என்.சுப்பையன் ஆகியோா் உடனிருந்தனா்.