திருச்சி விடுதியில் கட்சியினருக்கு அமித் ஷா ஆலோசனை வழங்கல்


இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, திருச்சியில் விடுதியில் தங்கியிருந்தபோது கட்சி நிா்வாகிகளுக்கு தமிழக தோ்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினாா்.
காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வெள்ளிக்கிழமை இரவு திருச்சி வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பின்னா் திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் தில்லிக்கு சனிக்கிழமை மாலை புறப்பட்டுச் சென்றாா்.
திருச்சிக்கு அவா் வந்தபோதும், மீண்டும் புறப்பட்டுச் சென்றபோதும் மாவட்ட பாஜக சாா்பில் மேள, தாளங்கள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய அமைச்சா்கள் மன்சுக் மாண்டவியா, எல். முருகன், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளா் அரவிந்த மேனன், இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, மத்திய முன்னாள் அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில, மாவட்ட பாஜக நிா்வாகிகள் பலரும் நட்சத்திர விடுதியில் அமித்ஷாவை சந்தித்தனா்.
முன்னதாக, கட்சி நிா்வாகிகளுடன் தமிழக தோ்தல் களம், அரசியல் சூழல் குறித்து கேட்டறிந்த அமித் ஷா, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தி தோ்தலுக்கு தயாராகவும், தீவிரமாக களப்பணியாற்றவும் ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
நிகழ்வில் திருச்சி மாவட்டஅதிமுக, அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...