தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்துக்கு... சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ஏசி ரயில்.


தீபாவளியை முன்னிட்டு, தாம்பரம்-நாகர்கோவில் மற்றும் தாம்பரம் - மானாமதுரை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே செவ்வாய்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாம்பரத்தில் இருந்து நாளை(அக்.30) பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ஏசி ரயில், மறுநாள் காலை 4.40 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறுவழித்தடத்தில் அக். 31 ஆம் தேதி காலை 8.45-க்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ஏசி ரயில் இரவு 9.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இதையும் படிக்க: நாளை பிற்பகல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! தீபாவளி ஸ்பெஷல்!
இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக இயக்கப்படுகிறது.
அதேபோல், தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கு நாளை(அக். 30) மாலை 5 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுவழித்தடத்தில், சிறப்பு ரயில் மானாமதுரையில் இருந்து அக். 31 ஆம் தேதி காலை 11.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வந்தடையும்.
இதைத் தவிர்த்து கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் நாளை காலை 9.35 மணிக்கும், மறுவழித்தடத்தில் திண்டுக்கல் - கோவை இடையே பிற்பகல் 2 மணிக்கும் இயக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...