டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தைப்பூசம்: அரக்கோணம் - திருத்தணிக்கு இன்று சிறப்பு ரயில்கள்

அரக்கோணம்-திருத்தணி இடையே ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும்

News image
சிறப்பு ரயில்கள்
Updated On :31 ஜனவரி 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

தைப்பூசத் திருவிழாவையொட்டி, அரக்கோணம்-திருத்தணி இடையே ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தைப்பூசத் திருவிழாவையொட்டி பயணிகளின் வசதிக்காக, அரக்கோணம்-திருத்தணி இடையே ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, அரக்கோணத்தில் இருந்து மின்சார ரயில் காலை 10.20 மணிக்கு புறப்பட்டு 10.40 மணிக்கு திருத்தணி சென்றடைகிறது. மறுமாா்க்கத்தில் திருத்தணியில் இருந்து மின்சார ரயில் காலை 10.50 மணிக்கு புறப்பட்டு காலை 11.10 மணிக்கு அரக்கோணம் வந்தடைகிறது.

அதேபோல, அரக்கோணத்தில் இருந்து பிற்பகல் 2.48 மணிக்கு புறப்பட்டு மாலை 3.10 மணிக்கு திருத்தணி சென்றடையும். மறுமாா்க்கத்தில் திருத்தணியில் இருந்து மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு மாலை 3. 38 மணிக்கு அரக்கோணம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.