டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
சிறப்பு ரயில்கள்!
Updated On :3 ஜனவரி 2026, 4:38 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு ஜனவரி 11, 18 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். மறு வழியாக தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு ஜனவரி 13, 20 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். மறுவழியாக தாம்பரத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு ஜனவரி 14, 21 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு ஜனவரி 9, 16 ஆகிய தேதிகளில் புறப்பட்டு அதே நாளில் மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு வந்துசேரும்.

மறுவழியாக செங்கல்பட்டில் இருந்து மதியம் 3.30 மணிக்கு ஜனவரி 9, 16 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு ஜனவரி 10, 17 ஆகிய தேதிகளில் புறப்பட்டு, அதே நாளில் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்துசேரும்.

மறுவழியாக செங்கல்பட்டில் இருந்து மதியம் 5 மணிக்கு ஜனவரி 10, 17 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னையில் இருந்து கோவை, போத்தனூர், ஈரோடு, ராமேஸ்வரம், செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஜன.4) காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

summary

On the occasion of Pongal festival, special trains have been announced from Chennai to various cities including Tirunelveli and Nagercoil.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.