டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தைப்பூசம்: பிப். 1-இல் மதுரை - பழனிக்கு சிறப்பு ரயில்

News image
சிறப்பு ரயில்- GMSRailway
Updated On :24 ஜனவரி 2026, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

தைப்பூசத் திருவிழாவையொட்டி, மதுரை-பழனி- மதுரைக்கு வருகிற பிப். 1-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தைப்பூசத் திருவிழாவையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், மதுரை-பழனி-மதுரைக்கு வருகிற பிப். 1-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி, மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) காலை 6 மணிக்கு புறப்படும் (06145) சிறப்பு ரயில் காலை 8.30 மணிக்கு பழனியை சென்றடையும். பிறகு, பழனியிலிருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06146) மாலை 5 மணிக்கு மதுரையை வந்தடையும்.

இந்த ரயில் இரு வழித்தடத்திலும் சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதில் 8 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 7 படுக்கை வசதிக் கொண்ட பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.