மதுராவிலுள்ள கிருஷ்ண ஜன்ம பூமி - ஷாஹி ஈத்கா தகராறு தொடர்பான மொத்தம் 16 சிவில் வழக்குகளை அலாகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மதுரா மாவட்ட நீதிமன்றம் மாற்றியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வாக்குமூலம் ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அலாகாபாத் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி மயங்க் குமார் ஜெயினுக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒதுக்கியுள்ளார், நவ. 7 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட நீதிபதி முன் வந்த மேலும் இரு வழக்குகளையும் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கே ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்த பதிவாளர், உச்ச நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவிப்பதில் நேரிட்ட தாமதத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
கிருஷ்ண ஜன்ம பூமி - ஷாஹி ஈத்கா பிரச்னை தொடர்பான இந்த வழக்குகள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று ஹிந்து பக்தர்கள் கேட்டுக்கொண்டனர். எனினும், இது சரியான நடைமுறை அல்ல, எல்லாராலும் உயர் நீதிமன்றத்துக்குப் பயணம் செய்ய முடியாது என்று மசூதி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்னை தொடர்பான விசாரணையை வரும் நவ. 10 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொள்ளவிருக்கிறது.
விசாரணையில் தாமதத்தைத் தவிர்க்க இந்த வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
கிருஷ்ண ஜன்ம பூமி - ஷாஹி ஈத்கா பிரச்னை தொடர்பாக, மதுராவிலுள்ள வெவ்வேறு நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. பொதுவாக, கிருஷ்ணர் பிறந்த இடம் என நம்பப்படும் இடத்தில்தான் ஈத்கா வளாகம் கட்டப்பட்டுள்ளதாகவும் இந்த இடத்தில் கோவில் இருந்ததாகவும் இந்த வழக்குகள் குறிப்பிடுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


