ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தின் முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குகள் பதிவாகியுள்ளது குறித்து...

News image

மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 3:40 pm

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் 91.78 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) அன்று நடைபெற்றது. இதையடுத்து, 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப். 29 அன்று நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் இன்று காலை முதல் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 91.78 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்துடன், மேற்கு வங்கத்தில் 1.84 கோடி (90.92%) ஆண் வாக்காளர்கள், 1.76 கோடி (92.69%) பெண் வாக்காளர்கள் மற்றும் 465 (56.79%) மூன்றாம் பாலினத்தவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 91 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது வரலாற்றில் இதுவே முதல்முறை. இறுதியாக, கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 84.72 சதவிகித வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Summary

A voter turnout of 91.78 percent was recorded in the first phase of the Assembly elections held in West Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.