இந்தத் தடையானது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மட்டுமல்ல, எந்த ஒரு தனி நபரும் நாள்பட்ட நோய்த்தொற்றில் இருந்தாலும், கேன்சர், உடலுறுப்பு செயலிழப்பு, ஒவ்வாமை, சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உட்பட்டவராக இருந்தாலும் அத்தகையோரிடம் இருந்தும் ரத்த தானம் பெறத் தடை விதிக்கின்றன புதிய நெறிமுறைகள்.
மருத்துவமனைகளில் ரத்த தானம் பெறுவது மற்றும் அளிப்பதற்கென வடிவமைக்கப்பட்ட இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பற்றி பேசுகையில் ரத்த வங்கிகளில் பணிபுரிவோர் தெரிவித்தது என்னவெனில், வளர்ந்த நாடுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய ரத்தப் பரிமாற்ற கவுன்சில் இப்படியோர் திருத்தத்தை வடிவமைத்திருப்பதாகவும், முந்தைய நெறிமுறைகளில் மேம்போக்காக மட்டுமே மலேரியா, எச். ஐ வி, எய்ட்ஸ் , மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கக் கூடாது என்று சில நிபந்தனைகள் இருந்ததாகவும் தற்போது மேலும் சில நிபந்தனைகளைச் சேர்த்து காலம் தோறும் மாறி வரும் மக்களின் வாழ்க்கைமுறைக்கு ஏற்ப புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.