சீர்காழி ஈசானியத்தெருவில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் சுமார் 40 ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். இந்த சுகாதார நிலையத்தில் நாள்தோறும் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவபரிசோதனைகளுக்கும், சிகிச்சைப் பெறவும் வந்து செல்கின்றனர். இங்கு சர்க்கரை வியாதி, இரத்த கொதிப்பு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதேபோல் வாரந்தோறும் செவ்வாய்கிழமை கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி,மருந்து-மாத்திரைகளும், புதன்கிழமை பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி, மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு 1மருத்துவ அலுவலர், 3 செவிலியர்கள் மற்றும் 1 லேப்டெக்னீசியன்கள், 1மருந்தாளுனர்,1பணியாளர் பணியாற்றுகின்றனர்.