சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

ஏஐடியுசி கைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி வட்டார கைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் பாண்டெக்ஸ்

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:10 am

ப. சுஜித்குமார்

புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி வட்டார கைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் பாண்டெக்ஸ் தலைமை அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியாரிடம் கொள்முதல் செய்து ஏழை எளிய மக்களுக்கு இலவச துணி வகைகள் விநியோகிப்பதை கைவிட வேண்டும். 2017 முதல் இலவச துணிகளை கைத்தறி சட்டத்தறி முலம் உற்பத்தி செய்து விநியோகிக்க வேண்டும்.

கைத்தறி சட்டத்தறி நெசவாளர்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பன நெசவாளர் காலனி அமைக்க வேண்டும், பணி ஓய்வு பெறும் 60 வயதுக்கு மேற்பட்ட நெசவாளர்களுக்கு சட்டப்படி பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி வட்டார கைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினர் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்தொடர்ச்சியாக  தட்டாஞ்சாவடி பாண்டெக்ஸ் தலைமை அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் செல்வராசு, செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாநில செயல்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான நாரா. கலைநாதன் போராட்டத்தைத் தொடங்கிவைத்தார். ஏஐடியுசி நிர்வாகிகள் முருகன். அபிஷேகம், தினேஷ் பொன்னையா, கலியபெருமாள், சேதுசெல்வம் உள்பட ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் கலந்துகொண்டனர்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.