தமிழகத்தில் பழங்குடியின மக்கள்தொகை 7.94 லட்சம்! மக்களவையில் மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் 7 லட்சத்து 94 ஆயிரம் பழங்குடியினர் வசித்து வருவதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.


புது தில்லி,
தமிழகத்தில் 7 லட்சத்து 94 ஆயிரம் பழங்குடியினர் வசித்து வருவதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
இது தொடர்பாக மக்களவையில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினரும், மக்களவை அதிமுக குழுத் தலைவருமான டாக்டர் பி.வேணுகோபால், "நாட்டில் தற்போது மொத்த பழங்குடியின மக்கள்தொகை விவரம் என்ன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஜஸ்வன்ட் சின் சுமன்பாய் பபோர் மக்களவையில் திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில் வருமாறு:
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 10 கோடியே 45 லட்சத்து 45 ஆயிரத்து 716 பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.
இதில் தமிழகத்தில் 7 லட்சத்து 94 ஆயிரத்து 697 பேரும், ஆந்திர மாநிலத்தில் 26 லட்சத்து 31 ஆயிரத்து 145 பேரும், கர்நாடகாவில் 42 லட்சத்து 48 ஆயிரத்து 987 பேரும், கேரளாவில் 4 லட்சத்து 84 ஆயிரத்து 839 பேரும் உள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...